வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Updated : ஞாயிறு, 4 மே 2014 (18:34 IST)

ரஜினியின் லிங்கா - அரண்மனையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுப்பு...?

ரஜினியின் லிங்கா படத்தின் பூஜை மே 2 -ம் தேதி விமர்சையாக நடந்தது. அதனைத் தொடர்ந்து 3 -ம் தேதி முதல் மைசூர் அரண்மனையில் படப்பிடிப்பு நடத்துவதாக திட்டம். ஆனால் அரண்மனையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அதனால் படப்பிடிப்பு தடைபட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
 
இதற்கு முன் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த முத்து, படையப்பா இரு படங்களின் படப்பிடிப்பும் மைசூரில் நடந்தன. இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இந்த சென்டிமெண்ட் மற்றும் கதை காரணமாக மைசூரில் படப்பிடிப்பு நடத்த தீர்மானித்தனர். அரண்மனைக்கு உரிமையுள்ள ராஜ குடும்பத்திடம் படப்பிடிப்பு நடத்த முறைப்படி அனுமதி வாங்கவில்லை என்றும், அதனால் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
 
எதுவாக இருப்பினும் ரஜினி படம் என்பதால் உடனடியாக அனுமதி வாங்கப்படும், திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடக்கும் என்கிறார்கள்.
 
லிங்காவில் ரஜினிக்கு இரு வேடங்கள். உடன் சோனாக்ஷி சின்கா, அனுஷ்கா நடிக்கின்றனர். வில்லனாக ஜெகபதிபாபு. ரஹ்மான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
 
படத்தை தயாரிப்பது ராக்லைன் வெங்கடேஷ்.