வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Modified: வியாழன், 10 ஏப்ரல் 2014 (15:46 IST)

மீண்டும் நடிக்க வரும் விஷாலின் அண்ணி

காஞ்சீவரம் படத்தோடு நடிப்புக்கு முழுக்குப் போட்ட நடிகை ஸ்ரேயா ரெட்டி மீண்டும் நடிக்க வருகிறார்.
 
திமிரு படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டியை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். திமிரு படத்தை வெற்றிப் படமாக்கியதில் ஸ்ரேயா ரெட்டியின் வில்லத்தனத்துக்கு கணிசமான பங்குண்டு. அந்தப் படத்தை தயாரித்தவர் விஷாலின் அண்ணன்.
படப்பிடிப்பில் ஸ்ரேயா ரெட்டிக்கும் விஷாலின் அண்ணனுக்கும் காதல் பற்றிக் கொள்ள அது கல்யாணத்தில் முடிந்தது. ஸ்ரேயா ரெட்டியும் நடிப்புக்கு முழுக்குப் போட்டு கணவருடன் தயாரிப்பில் கவனம் செலுத்தினார்.
 
இந்நிலையில் மீண்டும் நடிப்பது என முடிவு எடுத்துள்ளார் ஸ்ரேயா ரெட்டி.
 
பல இயக்குனர்கள் நீங்க நடித்தால்தான் இந்த கதாபாத்திரத்துக்கு சரியாக வரும் என அவரைத் தேடி வந்து கேட்கிறார்களாம். மேலும், தயாரிப்பைவிட நடிப்பதில்தான் ஸ்ரேயா ரெட்டிக்கும் விருப்பம். அதனால் விரைவில் மீண்டும் நடிக்க ஆரம்பிப்பேன் என அறிவித்துள்ளார்.