வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Updated : செவ்வாய், 10 ஜூன் 2014 (14:26 IST)

மருத்துவமனையில் ஒளிப்பதிவாளர் அசோக்குமார்

தமிழ் சினிமாவின் மதிப்புக்குரிய கேமராமேன்களில் முக்கியமானவர் அசோக்குமார். 72 வயதாகும் அவர் உடல்நலக் குறைவால் சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
அசோக்குமார் பணிபுரிந்த படங்களே அவரது பெருமையை சொல்லும். தமிழின் அழியாத காவியங்களுள் ஒன்றான உதிரிபூக்கள் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் அசோக்குமார்தான். மகேந்திரனின் ஜானி படத்துக்கும் அவர்தான் கேமராமேன். ஜீன்ஸ் படத்தில் பிரசாந்தின் இரட்டை வேடங்களை பிரமாதப்படுத்தியதும் இவர்தான். 
 
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல்வேறு மொழிகளில் 75 -க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்திருக்கும் அசோக்குமார் உடல்நிலைக் காரணமாக கடந்த சில வருடங்கள் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். 
 
இந்நிலையில் காட்டங்குளத்தூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
அசோக்குமார் விரைவில் குணமடைய அந்த இயற்கை துணைபுரியட்டும்.