1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Updated : புதன், 2 ஏப்ரல் 2014 (17:55 IST)

மகனுக்காக மீண்டும் அரிதாரம் பூசும் விஜயகாந்த்

நான் சினிமாவில் மட்டுமே நடித்திருக்கிறேன். இனி சினிமாவிலும் என் மகன் படத்தில் மட்டுமே நடிப்பேன் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்தார் விஜயகாந்த். சொன்னதை செயலாக்கும் பொருட்டு தேர்தலுக்குப் பிறகு மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் சகாப்தம் படத்தில் விஜயகாந்த் நடிக்கிறார்.
சண்முக பாண்டியனுக்கு சின்ன வயதிலேயே நடிப்பில் ஆர்வம். தனக்கு கலையுலக வாரிசு ஒருவர் இருக்க வேண்டும் என்ற விஜயகாந்தின் விருப்பத்துக்கு ஏற்ப சினிமா ஆசையுடன் வளர்ந்தார் சண்முக பாண்டியன். அவருக்காக கதை கேட்கும் படலம் கடந்த சில ஆண்டுகளாக நடந்தது. கடைசியில் சகாப்தம் என்ற ஸ்கிரிப்டை ஓகே செய்தார் விஜயகாந்த். சந்தோஷ் என்பவர் படத்தை இயக்க கடந்த டிசம்பரில் படத்துக்கு பூஜை போட்டனர்.
 
இந்தப் படத்தில் விஜயகாந்த் முக்கிய வேடம் ஏற்கிறார். கடந்த 2010 ல் வெளியான விருதகிரிதான் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கடைசிப் படம். மகனுக்காகவே சகாப்தத்தில் மேக்கப் போடும் முடிவை அவர் எடுத்துள்ளார்.
 
விஜய் ஹீரோ அந்தஸ்துக்கு திணறிய போது அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கேட்டதற்கு இணங்க, செந்தூரபாண்டி படத்தில் விஜய்யுடன் நடித்தார் விஜயகாந்த்.

அதேபோல் பெரியண்ணா படத்தில் சூர்யாவுடன் நடித்தார். தற்போது மகனுக்காக சகாப்தத்தில் நடிக்க உள்ளார்.