வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: திங்கள், 5 மே 2014 (13:49 IST)

பொருளாதார குற்ற பின்னணி வழக்குகளைப் பற்றிய உறுமீன்

ஜீரோரூல்ஸ் எண்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் டாக்டர் எ‌ல்.சிவபாலன் தயாரிக்கும் படம் உறுமீன். இப்படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார். சூதுகவ்வும், நேரம், ஜிகர்தண்டா படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சிம்ஹா கதாநாயனாக நடிக்கிறார். இவர்களுடன் புதுமுக நடிகை ஆராதனா, காளி, அனுபமாகுமார், கலையரசன், மூடர்கூடம் மகேஷ்வரன், ஆண்டனிதாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஒரு முன்னணி கதாநாயகர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 
இசை: அச்சு, ஒளிப்பதிவு: ரவீந்திரநாத் குரு, இணை தயாரிப்பு: சமன்யா ரெட்டி. 
 
படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, புது‌ச்சேரி, கோவை, கேரளா, ஹைதராபாத், பெங்களூரு, புனே ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
 
படத்தில் இடம்பெறும் ஒரு பாடல், யாதும் ஊரே யாவரும் கேளிர். புறநானுற்றின் 13 வரிகளை மையப்படுத்தி வித்தியாசமான முறையில் இசையமைக்கப்பட்டுள்ளது. மும்பையின் பிரபல ஸ்டுடியோ ஒன்றில் இப்பாடல் பதிவு செய்யப்பட்டது.
 
இத்திரைப்படம் 1990 – 2014 வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு பொருளதார குற்றங்களின் விசாரனணகள், நடப்புகள் மற்றும் குற்றப் பின்னணியை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஆக்‌ஷன் திரில்லர் வகை திரைப்படமாகும்.