வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Updated : புதன், 11 ஜூன் 2014 (12:43 IST)

பழமையான சிவன் கோவிலில் சிம்பு, நயன்தாரா

படம் வளருமா இல்லை கைவிடப்படுமா என்று இரண்டு வாரங்கள் முன்புவரை வம்பர்களின் வாயில் ஊசலாடிக் கொண்டிருந்த இது நம்ம ஆளு வேக வேகமாக வளர்ந்து வருகிறது. சிம்பு, நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குகிறார் பாண்டிராஜ்.
காதல் தோல்விக்குப் பின் சிம்பு, நயன்தாரா இணையும் படம் என்பதால் இது நம்ம ஆளுக்கு விளம்பரம் செய்யாமலே வேண்டியளவு விளம்பரம் கிடைத்துள்ளது. அதில் எதிர்மறை விளம்பரமும் கணிசம். 
 
சமீபத்தில் சிம்பு, நயன்தாரா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியொன்று படமாக்கப்பட்டது. பட்டு வேட்டி, சட்டையில் சிம்புவும், பட்டுச் சேலையில் நயன்தாராவுமாக பார்க்க பல ஜோ‌டி கண்கள் வேண்டும். பாடல் படமாக்கப்பட்டது பழமையான சிவன் கோவிலில். சுமார் 1500 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதாம் இந்த கோவில். 
 

படத்தில் இந்தப் பாடல் முக்கியமாக வருகிறது.

மேலும், கோவிலின் அழகை அப்படியே கொண்டு வரவேண்டும் என்பதற்காக ஹெலிகாம் கேமராக்களை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
கொசுறு செய்தி... இந்தப் படத்தில் முதல்முறையாக சொந்தக் குரலில் டப்பிங் பேசுகிறார் நயன்தாரா.