வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: வியாழன், 22 மே 2014 (12:03 IST)

பணம் படுத்தும் பாடு

பணம் ஒருவனின் வாழ்க்கையில் எப்படியெல்லாம் விளையாட்டு காட்டுகிறது என்பதை சொல்லும் படம்தான் ’பகடை பகடை’. 
 
மலையாளத்தில் 15 படங்கள் இயக்கியதோடு, இரண்டு படங்களுக்கு தேசிய விருதும் வாங்கிய இயக்குனர் சசிசங்கர். இவர் ஏற்கனவே சூர்யா, ஜோதிகா இரட்டை வேடங்களில் நடித்த ’பேரழகன்’ படத்தை இயக்கியவர். 
 
நீண்ட இடவெளிக்குப்பின் தற்போது தமிழில் ’பகடை பகடை’ படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகனாக ‘ஜெயம்’ படத்தில் சின்ன வயது வில்லனாக நடித்த திலீப்குமார் நடிக்கிறார். நாயகியாக திவ்யா நடிக்கிறார். 
 
திவ்யாவின் உடன் பிறந்த சகோதரி ரிச்சுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒய்.முரளி 
ஒளிப்பதிவு செய்கிறார். ராம்ஜி, ஜான்பீட்டர் இருவரும் இணைந்து இசையமைக்கிறார்கள். 
 
வசனம், வி.பிரபாகர். மேலும், இந்தப் படத்தில் இளவரசு, மயில்சாமி, சந்தானபாரதி, கோவை சரளா, சிங்கமுத்து ஆகியோர் நடிக்கிறார்கள்.