வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Modified: வியாழன், 10 ஏப்ரல் 2014 (11:35 IST)

தெலுங்கில் நயன்தாராவுக்கு விரிக்கப்படும் சிவப்பு கம்பளம்

தமிழைவிட தெலுங்கில்தான் நயன்தாராவுக்கு நடிக்க அதிக வாய்ப்புகள் வருகின்றன. பிரபுதேவாவுடன் காதலில் இருந்தவேளை ஸ்ரீராமராஜ்ஜியம் படத்துடன் நடிப்புக்கு முழுக்குப் போடுவதாக அவர் அறிவித்தார். அப்படத்தின் கடைசி நாளில் நயன்தாரா நடந்து வருகையில் அவர் மீது பூத்தூவி தெலுங்குப் படவுலகம் அவருக்கு ப்ரியாவிடை தந்தது.
அதேபோல் காதல் முறிவுக்குப் பிறகு நடிக்க வந்தவருக்கு சிவப்பு கம்பளம் முதலில் விரித்ததும் ஆந்திரா சினிமாதான். அங்கு இரு படங்கள் முடித்த பிறகே அவர் தமிழுக்கு வந்தார்.
 
தற்போது தமிழில் நண்பேன்டா, இது நம்ம ஆளு, ஜெயம் ரவியுடன் பெயரிடப்படாத படம் என மூன்று படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். தெலுங்கில் ஒன்றே ஒன்று, அனாமிகா. அதுவும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
 
இந்நிலையில் வெங்கடேஷ், நாகார்ஜுனா மற்றும் ஜுனியர் என்டிஆர் என மூன்று ஹீரோக்களின் படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு அழைப்பு வந்துள்ளது. மூன்றில் இரண்டிலாவது நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவிப்பார் என்பது அவருக்கு நெருக்கமானவர்களின் கருத்து.
 
விஜய், அஜீத் போன்ற முன்னணி நடிகர்கள் நயன்தாராவை அணுகாததால் அவர் தெலுங்கில் இனி அதிக கவனம் செலுத்துவார் எனவும் கூறப்படுகிறது.