வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: வெள்ளி, 13 ஜூன் 2014 (17:04 IST)

தனியொருவனுக்கு வில்லன் இல்லையெனில்....

ரீமேக் படங்களை இயக்கி வந்த ஜெயம் ராஜா முதல்முதலில் சொந்த ஸ்கிரிப்டில் இயக்கிய படம் வேலாயுதம். சுமார் படங்களை தந்து கொண்டிருந்த விஜய்க்கு அது சுமார் வெற்றிப்படமாக அமைந்தது. அந்த தன்னம்பிக்கையில் தம்பி ஜெயம் ரவியை வைத்து ராஜா இயக்கி வரும் படம் தனி ஒருவன்.
சென்னையில் ரயில்வே ஸ்டேஷன் போன்று அரங்கு அமைத்து தனி ஒருவனின் படப்பிடிப்பை தொடங்கினர். ஜெயம் ரவியுடன் நயன்தாராவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
 
பொதுவாக ஹீரோயின் கிடைப்பதற்குதான் அல்லாடுவார்கள். இங்கு வில்லனுக்கு. பிரகாஷ்ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, கோட்டா சீனிவாசராவ் போன்ற தெரிந்த வில்லன்களாக இல்லாமல் ஒரு புதிய முகத்தை வில்லனாக்க விரும்புகிறார் ஜெயம் ராஜா. அதாவது தற்போது ஹீரோவாக நடித்து வரும் ஒருவரை வில்லனாக்க திட்டமிட்டுள்ளார்.
 
ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிக்க எந்த ஹீரோவும் தயாராக இல்லை. ஆர்யா வில்லனாக நடிக்க தயார் என்று செய்திகள் வெளியானாலும் அது வெறும் வதந்தி என்பதுதான் உண்மை.
 
பேசாமல் ஆதிபகவான் போன்று ஜெயம் ரவியையே வில்லனாக்கிவிட்டால்...?