வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : திங்கள், 9 ஜூன் 2014 (16:53 IST)

சௌந்தர்யா ரஜினிகாந்தை மன்னிப்பு கேட்க வைத்த சிம்பு ரசிகர்கள்

சிம்பு பாடுவதை நிறுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்ததற்காக சௌந்தர்யா ரஜினிகாந்த் சிம்பு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
 
இதுவரை சிம்புவைதான் வம்பு தேடி வந்தது. இப்போது சிம்புவைப் பற்றி பேசுகிறவர்களையும் வம்புகள் துரத்துகின்றன. 
தனியார் தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சில் சௌந்தர்யா சமீபத்தில் கலந்து கொண்டார். அப்போது, சிம்புவிடம் ஒன்றை நிறுத்தச் சொல்ல வேண்டும் என்றால் எதை நிறுத்தச் சொல்வீர்கள் என கேட்கப்பட்டது. ஜாலிக்காக கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு அதே ஜாலியுடன், இனி தயவுசெய்து பாடாதே என்று சொல்வேன் என சௌந்தர்யா தெரிவித்தார்.
 

சௌந்தர்யாவும், சிம்புவும் சின்ன வயதிலேயே அறிமுகமானவர்கள், நண்பர்கள். கோச்சடையான் பார்த்துவிட்டு சிம்பு சமூகவலைத்தளத்தில் படத்தை பாராட்டியதும், சௌந்தர்யா அதற்கு நன்றி தெரிவித்ததும் முக்கியமானது.
இந்நிலையில் சிம்பு பாடக் கூடாது என்று சொன்னதற்காக சிம்பு ரசிகர்கள் கொந்தளித்து சௌந்தர்யா மீது பாய ஆரம்பித்தனர். சமூக வலைத்தளங்களில் இது சூடான விவாதப் பொருளாக, மன்னிப்பு கேட்டுக் கொண்டார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
 
நாங்கள் இருவரும் சிறு வயதிலிருந்தே நல்ல நண்பர்கள். நான் விளையாட்டுக்குதான் அப்படி கூறினேன். அது உங்களை காயப்படுத்தியிருந்தால் மன்னியுங்கள் என சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.