வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: திங்கள், 19 மே 2014 (12:24 IST)

சினேகாவையும் விட்டுவைக்காத பார்த்திபன்

எடுக்கிற படம் வித்தியாசமாக இருக்கிறதோ இல்லையோ. படத்தை உருவாக்க பார்த்திபன் எடுக்கிற முயற்சிகள் எப்போதும் வித்தியாசமானவை. அவர் தற்போது இயக்கி வரும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம்.
படத்தை அறிவித்த கையோடு, இந்தப் படத்தில் கதை கிடையாது என்று கூறி அனைவரையும் தனது படத்தின்பால் ஈர்க்க வைத்தார். கதை இல்லாமல் எப்படி படம்?
 
சினிமா எடுப்பதற்காக நடத்தப்படும் கதை விவாதத்தை பார்த்திபன் படமாக்குகிறார். விவாதத்தில் அந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும், இப்படி காட்சிகள் வைத்தால் ரசிப்பார்கள் என்று கூறுவார்களில்லையா? அவர்கள் அப்படி விவாதிக்கும் விஷயங்களை அப்படியே திரையில் காட்சிகளாக கொண்டு வந்திருக்கிறார். ஆர்யா நடித்தால் நன்றாக இருக்கும் எனும் போது நடிகர் ஆர்யாவே திரையில் தோன்றி அந்தக் காட்சியில் நடிப்பார்.
இந்த புதுமையான திரைக்கதை காரணமாக பல முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் நடிக்கின்றனர். இசையை பொறுத்தவரை மொத்தம் 5 இசையமைப்பாளர்கள்.தமன், விஜய் ஆண்டனி, சரத், அல்போன்ஸ் ஜோசப், சத்யா. தமிழர்கள் மறந்து போன சிம்ரனை அழைத்து வந்து ஒரு பாடல் பாட வைத்துள்ளார். கணவன் மனைவியான ஜீ.வி.பிரகாஷும், சைந்தவியும் ஒரு பாடல் பாடியுள்ளனர். விளம்பரம், சினிமா என்று நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திவரும் சினேகாவையும் ஒரு பாடல் பாட வைத்துள்ளார்.
 
சினேகாவின் நடிப்பையும் தோற்றத்தையும் மட்டும் ரசித்தவர்கள் கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் அவரது குரலையும் கேட்டு பரவசப்படலாம்.