கோவாவில் படமாக்கப்படும் சூர்யா, சமந்தா டூயட்
இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது அஞ்சான். எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வந்திருக்கிறது படம் என்று மனம் நிறைய திருப்தியுடன் கூறுகிறார் லிங்குசாமி.
ஏற்கனவே அறிவித்தபடி ஆகஸ்ட் 15 படத்தை வெளியிடுவதில் எந்த மாற்றமும் இல்லை. ஜுலையில் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீடு. அதற்குமுன் சில காட்சிகளையும், ஒரு பாடல் காட்சியையும் படமாக்க வேண்டும். இதற்காக இந்த மாதம் 8 -ம் தேதி சூர்யா, சமந்தா உள்ளிட்ட படயூனிட் கோவா செல்கிறது. அங்கு இவர்களின் டூயட் பாடலை படமாக்குகிறார்கள். சில வசனக் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளது. இரண்டும் முடிந்தால் அஞ்சானின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும்.
படத்தின் டப்பிங் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக லிங்குசாமி தெரிவித்துள்ளார். விரைவில் சூர்யாவும் டப்பிங் பேசவிருக்கிறார்.
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸும், யுடிவி யும் இணைந்து அஞ்சானை தயாரிக்கின்றன. யுவன் ஷங்கர் ராஜா இசை. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு.
மும்பையை களமாகக் கொண்ட படம் என்பதால் இந்தியிலும் படத்தை டப் செய்யும் எண்ணம் உள்ளது.