வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : செவ்வாய், 3 ஜூன் 2014 (15:04 IST)

கொலை மிரட்டல் - நடிகர் சூர்யா மீது புகார் தந்த அறிமுக இயக்குனர்

நடிகர் சூர்யா தரப்பினர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் அறிமுக இயக்குனர் முருகராஜா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்துள்ளார்.
முருகராஜா சரவணன் என்கிற சூர்யா என்ற படத்தை தயாரித்து இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஆரம்பம் முதலே சூர்யா தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக குற்றச்சாட்டு உள்ளது. காரணம் சூர்யாவின் இயற்பெயர் சரவணன். சினிமாவுக்காக வைத்துக் கொண்ட பெயர் சூர்யா. முருகராஜாவின் படத்தின் பெயர் சரவணன் என்கிற சூர்யா என்பதால் சூர்யாவை விமர்சித்து படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. 
 
படத்தை தொடங்கியது முதல், சூர்யா தரப்பினர் என்னை மிரட்டுகிறார்கள் என முருகராஜா கூறி வருகிறார். தற்போது பிரச்சனை கமிஷனர் அலுவலகம் வரை சென்றுள்ளது. நேற்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார் முருகராஜா.
 

சரவணன் என்கிற சூர்யா, என்ற பெயரில் நான் சினிமா படம் தயாரித்து, இயக்கியுள்ளேன். நானே கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறேன். இந்த படத்தின் தலைப்பை முறையாக பதிவு செய்து இருக்கிறேன். இந்த சூழ்நிலையில் படத்தின் தலைப்பை மாற்றச்சொல்லி, நடிகர் சூர்யா தரப்பில் எனக்கு வற்புறுத்தல் வந்தது.
நான் படத்தின் தலைப்பை மாற்ற மறுத்துவிட்டேன். இதனால் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. படத்தையும் வெளியிட விடாமல் தடுத்துவிட்டனர். நடிகர் சூர்யா தரப்பினரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. உரிய பாதுகாப்பு அளிப்பதோடு, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
 
இவ்வாறு அந்த மனுவில் முருகராஜா தெரிவித்துள்ளார்.