1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Muthukumar
Last Updated : புதன், 30 ஏப்ரல் 2014 (10:40 IST)

காமெடி நடிகருக்கு ஜோ‌டியாகும் அஞ்சலி

சொந்தக் காசில் சூன்யம் வைப்பது என்பது இதுதானா? அஞ்சலியின் இப்போதைய நிலையைப் பார்த்தால் போட்டோவும்கூட நெகடிவாகதான் கண்ணுக்கு தெரிகிறது.
முன்னணி ஹீரோயினாக தமிழில் வளர்ந்து வருகிற நேரம் பார்த்து சொந்தமாகவே காணாமல் போனார் அஞ்சலி. அதில் பிடித்தது சனி. நமது படத்தில் நடிக்கும் போது காணமால் போனால் நம் படத்தோட கதி என்னாகிறது என்று தயாரிப்பாளர்களும், அவருடன் நடிக்கையில் காணாமல் போய் நம் பெயரை சந்தியில் இழுத்துவிட்டால் பத்திரிகைகள் சிந்து பாடிவிடுமே என்று நடிகர்களும் அச்சப்பட்ட காரணத்தால் அஞ்சலி என்றாலே அஞ்சாறு கிலோ மீட்டர் விலகிச் செல்ல ஆரம்பித்தனர் திரையுலகினர்.

அதன் விளைவை அடுத்தடுத்த மாதங்களிலேயே அறிந்து கொண்டார் அஞ்சலி. அவரது வாழ்க்கையில் சந்திக்காத அளவுக்கு வாய்ப்பு வறட்சி.
தெரிந்த ஹீரோக்கள் யாரும் உதவ முன்வராத நிலையில் தெலுங்கு சினிமாவில் காமெடி நடிகர்களுடன் ஜோ‌டி சேரப் போகிறாராம். 
 
தன்னைத்தானே கிட்நாப் செய்ததன் பலன்... இப்படி சிரிக்கிற மாதிரி ஆகிவிட்டதே.