வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Modified: சனி, 5 ஏப்ரல் 2014 (12:02 IST)

கத்திரி வெயிலில் கத்தி படப்பிடிப்பு

ஏப்ரல், மே மாதங்களில் சென்னை சூடான வாணலியாக மாறும். அதில் வறுபட விருப்பமின்றி சுவிட்சர்லாந்த், நியூசிலாந்த் என்று குளிர் பிரதேசங்களுக்கு பாடல் காட்சிகளை படமாக்க கிளம்பிவிடுவார்கள் புத்திசாலிகள். ஆனால் இந்தமுறை சென்னையின் கத்திரி வெயலிலிருந்து கத்தி டீம் தப்பப் போவதில்லை.
கொல்கத்தாவில் தொடங்கிய கத்தியின் படப்பிடிப்பு சென்னை, ராஜமுந்திரி, ஹைதராபாத் என்று நான் ஸ்டாப்பாக நடந்து, வரும் 7 ஆம் தேதி யு டர்ன் அடிக்கிறது. அதாவது 7 ஆம் தேதியிலிருந்து மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு. ஒன்றிரண்டு தினங்களில்லை, முப்பது நாள்கள்.
 
கோவாவின் குளுகுளு சீஸனில் படப்பிடிப்பை நடத்தி வரும் மீகாமன் படக்குழுவும் இந்த மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு சென்னை வருகிறார்கள். அவர்களுக்கும் அதே முப்பது நாள் வேலைத்திட்டம். ஏப்ரல் ஆரம்பித்ததும் வெளிநாடுகளுக்கு விமானம் பிடிக்கும் நட்சத்திரங்கள் இந்தமுறை சென்னையைவிட்டு விலகப் போவதில்லை.
 
அவ்வளவு சின்சியராகிவிட்டதா தமிழ் சினிமா?