வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: வெள்ளி, 9 மே 2014 (19:07 IST)

கதை எழுதும் ஹீரோ

நடிகர் சரத்குமார் தற்போது இரட்டை வேடங்களில் நடித்து வரும் படத்திற்கு சண்ட மாருதம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு ஆக்‌ஷன் படமாக தயாராகி வரும் இந்தப் படத்தின் கதையை சரத்குமாரே எழுதியிருக்கிறார். 
 
படம் தொடங்கியது முதல் முடியும் வரை தீப்பிடித்தது போன்ற ஒரு பரபரப்பு இருந்து கொண்டே இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் லிஸ்டின் ஸ்டீபனோடு இணைந்து தயாரிக்கிறார் ராதிகா சரத்குமார். 
 
மேலும், பல முன்னணி நடிக, நடிகைகள் நடிக்கும் இந்தப் படத்திற்கு பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் திரைக்கதை, வசனம் எழுதுகிறார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்க, பாடல்களை நா.முத்துகுமார் எழுதுகிறார்.