1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Modified: வெள்ளி, 2 மே 2014 (16:57 IST)

ஓய்வு பெற்ற நீதிபதி பெஃப்சி தேர்தல் அதிகாரியாக நியமனம்

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெஃப்சி) தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைவதால் 2014 - 2016 -ம் ஆண்டுக்கான தேர்தலை விரைவில் நடத்த உள்ளனர்.
இது தொடர்பாக பெஃப்சி அமைப்பு சார்பில் தேர்தலை நடத்த ஓய்பு பெற்ற நீதிபதியை நியமனம் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அத்துடன் தென்னிந்திய சினிமா மற்றும் டி.வி.ஓட்டுனர்கள் சங்கம், தங்களுடைய சங்க நடவடிக்கைகளில் பெஃப்சி தலையிடக் கூடாது என்று தனியாக மனு தாக்கல் செய்தனர்.
 
இந்த இரு மனுக்களையும் விசாரித்த நீதிபதி, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தேர்தலை நடத்த இரு தரப்பினரும் ஒத்துக் கொண்டதாகவும், தேர்தல் அதிகாரியாக முன்னாள் மாவட்ட நீதிபதி கே.பாலசுப்ரமணியன் செயல்படுவார் எனவும் தனது தீர்ப்பில் கூறினார்.
 
மேலும், நீதிபதி கே.பாலசுப்ரமணியன் தேர்தல் தேதியை அறிவிப்பார் என்றும், தேர்தல் முடிந்த பின் அது குறித்த அறிக்கையை ஜுன் 9 -ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.