1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : திங்கள், 26 மே 2014 (13:18 IST)

ஒய் திஸ் கொலவெறி... கொலைவெறி...?

ராஜபக்சேயின் இந்திய வருகைக்கு கண்டனம் தெ‌ரிவித்து அறிக்கை வெளியிட்டார் பாரதிராஜா. ஊடகங்களுக்கு அந்த அறிக்கையின் நகல் அனுப்பப்பட்டது. அதை படித்த அனைவருக்கும் பேரதிர்ச்சி. அந்த சின்ன அறிக்கை நெடுக எழுத்துப் பிழைகள் வாக்கிய பிழைகள்.
 
குலைக்கும் என்பதற்குப் பதிலாக குழைக்கும் என்றும், பின்னரும் என்பதை பின்னறும் எனவும், தொப்புள்கொடிக்குப் பதிலாக தொப்புல்கொடி எனவும் பிழைகள் மலிந்திருந்தன.
 
ஆனால் சகிக்க முடியாதது வாக்கிய பிழைகள்.
 
பாராளுமன்றத்தில் மூன்றாவது பெ‌ரிய கட்சியின் தலைவர் தமிழக முதல்வர் அவர்கள் பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு ராஜபக்சேயின் வருகையால் கலந்து கொள்ளவில்லை என்ற அறிவிப்பிற்கு பின்னரும் மோடியின் மௌனம் சாதிப்பதும்....
 
இந்த வாக்கியத்தில்தான் எத்தனை பிழைகள்...? இத்துடன் இது முடியவில்லை.
 

.... அதற்கு பாஜக தலைவர்கள் சப்பை கட்டு கட்டுவதால் ஒட்டு மொத்த தமிழர்களையும் வீதிக்கு இறங்கி போராடும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.... என மேலே உள்ள வாக்கியம் தொடர்கிறது.
இவ்வளவு பிழைகளுடன் எப்படி ஓர் அறிக்கையை பாரதிராஜாவால் வெளியிட முடிந்தது?