1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : வெள்ளி, 6 ஜூன் 2014 (18:50 IST)

ஆயிரத்தில் ஒருவன் சீக்வெல் - அசராத செல்வராகவன்

செல்வராகவனின் ஃபேன்டஸிகளான ஆயிரத்தில் ஒருவனும், இரண்டாம் உலகமும் செல்வராகவனின் சந்தை மதிப்பை பெரிதும் கீழிறக்கிய படங்கள். அதிலும் இரண்டாம் உலகம் பாக்ஸ் ஆபிஸில் பலத்த அடி வாங்கியது. பெரிய பட்ஜெட் படங்கள் குறித்து இன்னும் சில வருடங்களுக்கேனும் செல்வராகவன் நினைத்துப் பார்க்க முடியாது.
 
இப்படியொரு சூழலில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் அவர் புதிய படத்தை இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால் என்ன காரணமோ அறிவிப்போடு நின்றுவிட்டது படம். படத்தை தயாரிப்பதாக இருந்த வருண் மணியன் தயாரிப்பிலிருந்து பின்வாங்கியதுதான் காரணம் என சொல்லப்படுகிறது. 
 
அடுத்து செல்வராகவன் என்ன செய்யப் போகிறார்?
 
இந்த கேள்வி பூதாகரமாக எழுந்து நிற்கையில் அவரின் ட்விட்டர் பக்கத்தைப் பார்த்தவர்களுக்கு பேரதிர்ச்சி. அதில் ஆயிரத்தில் ஒருவன் சீக்வெல் குறித்து குறிப்பிட்டுள்ளார் செல்வா.
 
 

என்னுடைய மனசு எப்போதும் ஆயிரத்தில் ஒருவன் 2-வில்தான் இருக்கிறது. எனக்கு இப்போது ஒரு பிரேக் தேவை. ஆனால் அடுத்த வருடம் அதை கண்டிப்பாக சாத்தியப்படுத்துவேன். சோழர்களின் கர்ஜனையை கேட்க தயாராகுங்கள்.
2010-ல் வெளியான ஆயிரத்தில் ஒருவன் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. இண்டியானா ஜோன்ஸ் மாதிரியான காட்சிகளால் படம் நிறைந்திருந்ததும் ஒரு காரணம். இரண்டாவது குழப்பமான சரித்திர நிகழ்வுகள்.
 
இரண்டாம் பாகத்தில் இவற்றையெல்லாம் களைந்து புதுவிதமான அனுபவத்தை செல்வராகவன் தருவார் என நம்புவோம்.