வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 8 ஏப்ரல் 2014 (15:02 IST)

அருள்நிதி நடிக்கும் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படத்துக்குப் பிறகு அருள்நிதி நடித்துவரும் படம், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் 
 
படத்தின் பெயரிலிருந்தே இதுவொரு நகைச்சுவைப் படம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
எந்த குற்றமும் நடக்காத ஒரு கிராமத்தில் ஒரு காவல் நிலையமும், நாலு போலீசாரும் இருக்கிறார்கள். நாலில் ஒருவர் நாயகன் அருள்நிதி. எந்த குற்றமும் நடக்காத அந்த ஊரில் பிரச்சனை ஒன்று வரும்போது என்னாகிறது நிலைமை என்பதுதான் படத்தின் ஒன்லைன்.
 
அறிமுக இயக்குனர் என்.ஜே.ஸ்ரீகிருஷ்ணா எழுதி இயக்குகிறார். அருள்நிதியுடன் நடிப்பது ரம்யா நம்பீசன். இசையமைப்பாளர் ரஜின் என்ற புதுமுகம். சிங்கம்புலி, ராஜ்குமார் இவர்களுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பகவதி பெருமாளும் நடித்துள்ளார்.
 
சமீபத்தில் படத்தின் டைட்டில் டிசைனை வெளியிட்டனர். இந்த டிசைனே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.