1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அ‌றிவோ‌ம்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 10 ஜூலை 2016 (17:46 IST)

இசை அமைக்க இனி இசை கருவி தேவையில்லை; கைகள் போதும்

இசையில் ஆர்வம் உள்லவர்கள் இனி இசை கருவியை பயன்படுத்த அவசியமில்லை. கைகளை கொண்டே இசை அமைக்கலாம்.


 

 
மோகீஸ் பிளே என்ற கருவியை உங்கள் ஸ்மார்ட்போனில் இணைத்து கொண்டால் போதும். இந்த சென்சார் கருவியை தரையில் வைத்து விட்டு உங்கள் கைகளால் தட்டினால், அந்த ஒலியை அது இசையாக மாற்றி தரும்.
 
இந்த சென்சார் கருவியை எந்த இடத்தில் வேண்டுமானாலும் பொருத்தி கொள்ளலாம். அதன் மூலம் நீங்கள் எளிமையாக இசை அமைக்கலாம். இசை கருவி இல்லை என்ற கவலையும் வேண்டாம், இசை கருவி இல்லமல் பல விதமான சத்தங்களை இசையாக மாற்றி அமைக்கலாம்.
 
இசை மீது ஆர்வல் உள்ளவர்களுக்கு இது பெரும் உதவியாக அமையும்.
 
                                                                    நன்றி: NowThisFuture