வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2016 (17:21 IST)

என்னுடைய கதை என்பதால் நானே படத்தை இயக்குகிறேன் - ஹிப்ஹாப் தமிழா பேட்டி

என்னுடைய கதை என்பதால் நானே படத்தை இயக்குகிறேன் - ஹிப்ஹாப் தமிழா பேட்டி

ஆம்பள படத்துக்கு இசையமைத்த ஹிப்ஹாப் தமிழா ஆதி இப்போது நடிகர். மீசையை முறுக்கு படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி நடிக்கிறார். இசையும் அவரே. தனது இந்த திடீர் அவதாரங்கள் குறித்து அவர் அளித்த பேட்டி...


 
 
நடிக்கப் போகிறீர்களே...?
 
நான் சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வீடியோ இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டேன். அதில் என்னுடைய நடிப்பை பார்த்து சுந்தர்.சி. என்னை பாராட்டினார்.
 
மீசையை முறுக்கு படம் ஆரம்பமானது எப்படி?
 
நான் மீசையை முறுக்கு கதையை எழுதி சுந்தர் சி.யிடம் காட்டினேன். அதை படித்துப் பார்த்தவர் உடனே அதனை தயாரிக்க முன் வந்தார்.
 
இயக்குனரானது...?
 
என்னுடைய கதை என்பதால் நானே படத்தை இயக்குவது என்று முடிவு செய்திருந்தேன்.
 
ஏன்...?
 
நான் இயக்கினால்தான் என்னைப் பற்றிய நிறைய விஷங்களை அதில் சொல்லமுடியும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. இதற்கு சுந்தர்.சியும் உறுதுணையாக இருந்தார்.
 
நடிகனானது...?
 
சுந்தர் சி.தான் நீயே நடி என்று என்னை இதில் நாயகனாக நடிக்க வைத்தார்.
 
இசை...?
 
அதுவும் நான்தான்.
 
யார் இதில் நடிக்கிறார்கள்...?
 
பெரும்பாலும் புதுமுகங்கள். விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 
 
அவருக்கு என்ன வேடம்?
 
என்னுடைய அப்பாவாக வருகிறார்.
 
நாயகி...? 
 
ஆத்மிகா என்கிற புதுமுக நடிகையை ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.