வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By கே.என்.வடிவேல்
Last Updated : வெள்ளி, 25 மார்ச் 2016 (10:57 IST)

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை - பரபரப்பு தகவல்கள்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை - பரபரப்பு தகவல்கள்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறக்க வாய்ப்பு இல்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
 

 
இது குறித்து, ஓய்வு பெற்ற பேராசிரியரும், முன்னாள் இந்திய கடற்படை மரைன் கமாண்டோ, கார்கில் என அழைக்கப்படும் எம்.சுப்ரமணியம் ஒரு இணையதள பேட்டியில்இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் போர் நடந்த போது, இலங்கை ராணுவத்தால், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்யப்பட்டதாக தொலைக்காட்சியில் அவரது உடல் காட்டப்பட்டது. ஆனால், அது, அவரது உடலாக இருக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.
 
இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு மே 17 அன்று நந்திக்கடல் முள்ளிவாய்க்காலில் ஈழப் போர் கடைசி நாளில் கொல்லப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது
 
மேலும், பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள இல்லை என்பதனால் அவர் இறந்திருக்க கூடும் என்றும், இது குறித்த வழக்குகள் சட்டப்பூர்வமாக இருக்க வேண்டியது அவசியம் என குறிப்பிடப்பட்டிடுள்ளது. ஆக, பிரபாகரன் மரணம் குறித் தகவல்கள் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியுள்ளது.