வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By Suresh
Last Updated : சனி, 2 ஏப்ரல் 2016 (14:44 IST)

இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்தியர்களின் சிறுநீரகம் திருட்டு: அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்தியர்களின் சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளது என்று அந்நாட்டு காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.


 

 
சிலவாரங்களுக்கு முன்னர் இலங்கையில் வீசா அனுமதியின்றி நாட்டில் தங்கியிருந்தாக 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
கைது செய்யப்பட்ட 8 பேர்களில் 6 பேரது சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளது. இலங்கையில் உடல் உறுப்புகள் கொள்ளையில் இந்தியர்களின் சிறுநிரகம் அகற்றப்பட்டுள்ளது என்று கொழும்பு குற்றப்பிரிவு காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த ஜனவரி மாதம் இலங்கையில் சிறுநீரக அறுவை சிகிச்சையில் மோசடி நடப்பதாக இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
 
6 மருத்துவர்கள் இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக இந்திய காவல்துறையினர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இலங்கை விசாரணையைத் தொடங்கியது.
 
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத சிறுநீரக வியாபாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.