செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. விளையாட்டு
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : சனி, 19 ஏப்ரல் 2014 (12:45 IST)

பவுலர்களைக் காலி செய்யவே அப்படி ஆடினேன் - மேக்ஸ்வெல்

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த மிகப்பெரிய இலக்கான 206 ரன்களை ஊதித் தள்ளிய பஞ்சாப் அணியில் முக்கிய ஸ்டார் கிளென் மேக்ஸ்வெல். இவரை கட்டுப்படுத்த முடியாமல் சென்னை கேப்டன் தோனி வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.
இந்நிலையில், விக்கெட்டை விட்டு ஒதுங்கியும், நகர்ந்தும், ரிவர்ஸ் ஸ்வீப் செய்தும் பல புதுமாதிரியான ஷாட்களை ஆடியது பவுலர்களின் ரிதமைக் காலி செய்யவே என்று கூறியுள்ளார் கிளென் மேக்ஸ்வெல்.
 
நேற்று அவர் 43 பந்துகளில் 95 ரன்களை விளாசினார். "நான் பவுலர்களை கடுமையாக ஏமாற்றமடையச் செய்யவே அப்படி ஆடினேன். சென்னை அணிக்கு எதிராக 200க்கும் மேற்பட்ட இலக்கை துரத்தியது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார் மேக்ஸ்வெல்.
 
கேப்டன் தோனி கூறுகையில், நாம் 200 அடிக்க முடியும்போது எதிராளியும் அடிப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும், பந்து வீச்சு இன்னும் மேம்படவேண்டும், ஒவ்வொரு பேட்ஸ்மெனுக்கும் ஒவ்வொரு உத்தியை பவுலர்கள் வகுத்துக் கொள்ளவேண்டும். ஸ்பின் எடுகாததால் பவுலர்களுக்கு கடினமாக இருந்தது.
 
என்றார் தோனி.