வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 30 மார்ச் 2015 (15:52 IST)

இந்திய ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா, ஸ்ரீகாந்த்

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா நெவாலும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்தும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
‘சன்ரைஸ்’ இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால், தாய்லாந்து வீராங்கனை ராட்சானோக்கை எதிர்த்து விளையாடினார்.
 
உலக தர வரிசையில் நேற்று முன்தினம் நம்பர் ஒன் இடத்தை பிடித்து வரலாறு படைத்த சாய்னாவின் அபாரமான ஆட்டத்துக்கு முன்னால் ராட்சானோக் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினார்.
 
49 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா நெவால் 21–16, 21–14 என்ற நேர்செட்டில் ராட்சானோக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
 
25 வயதான சாய்னா நெவால் இந்திய ஓபன் பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பெருமைக்குரிய சாய்னா வென்ற 15–வது சர்வதேச பட்டம் இதுவாகும்.
 
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 18–21, 21–13, 21–12 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீரர் விக்டோர் ஆக்ஸ்செனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.