1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 24 செப்டம்பர் 2020 (11:34 IST)

இன்றைய போட்டியில் கெய்ல் களமிறங்குவாரா? ஆர் சி பி vs பஞ்சாப்!

இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக கெய்ல் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல்லைக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கலக்கிய ஒரு பேட்ஸ்மேன் என்றால் அது கிறிஸ் கெய்ல்தான். தன் இமாலய சிக்ஸரகளால் ரசிகர்களை வியக்க வைத்த கெய்ல் பெங்களூர் அணியால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கழட்டி விடப்பட்டார். அதன் பின்னர் அவர் அடிப்படை விலையான 2 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று கோலி தலைமையிலான ஆர் சி பி அணிக்கும் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணிக்கும் இடையேயான போட்டி நடக்க உள்ளது. இதில் முதல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடாத கெய்ல் இன்று விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அவர் இறங்கினால் அது பஞ்சாப் அணிக்கு மேலும் பலமாக அமையும்.