வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 24 நவம்பர் 2018 (16:31 IST)

ஹீரோ கோலி ’ அம்பயருடன் 'ஏன் சண்டை போட்டார்...?

மெல்போர்னில் நேற்றைய இரண்டாவது  டிவென்டி - 20 ஆட்டத்தில் விராட் கோலி அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால் மைதானத்தில் சிறிது நேரம் பதற்றம் நேர்ந்தது.
நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி - 20 ஆட்டத்தில் 19 ஆவது ஓவரை இந்திய வீரர் பும்ரா வீசினார்.
 
அப்போது மழை பலமாக பெய்தது. ஆனால் அம்ப்யர்கள் இருவரும் போட்டியை நிறுத்தாமல் இருந்தனர். அப்போது கோபமடைந்த கோலி அம்பயரை நெருங்கி : இப்படி மழைபெய்தால் மைதானத்தில் நாங்கள் பேட் செய்யும் போது சிரமம் ஏற்படும் என்று வாக்குவாதம் செய்தார்.
 
விராட் கூறியதை பெலிவியலின் அமர்ந்து கமெண்ட் செய்துகொண்டிருந்த மைக்கெல் கிளார்க் வரவேற்று கோலிக்கு ஆதரவளித்தார்.
 
இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.