வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 6 அக்டோபர் 2015 (19:08 IST)

'என்ன ஒரு அவமானம்!' - ரசிகர்களுக்கு யுவராஜ் சிங் கண்டனம்

மைதானத்தில் ரசிகர்கள் குடிநீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டதிற்கு கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
 

 
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இரண்டாவது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
 
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், தென் ஆப்பிரிக்கா அணி விளையாடுகையில் ரசிகர்கள் பாட்டில்களை வீசி கலாட்டா செய்தனர்.
 

 
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள யுவராஜ் சிங், “என்ன ஒரு அவமானம்! நாங்கள் வெற்றிபெறும் பொழுது எல்லாம் நல்லபடியாக இருக்கிறது. நாங்கள் தோல்வியடையும் பொழுது நீங்கள் இப்படியா நடந்துகொள்வது?
 
தயவுசெய்து உங்களுடைய வீரர்களுக்கு கொஞ்சம் மரியாதை காட்டுங்கள். விளையாட்டிற்கு மரியாதை செலுத்துங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
 
ரசிகர்களின் ரகளையால் ஆட்டம் 45 நிமிடம் பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்டம் துவங்கியது குறிப்பிடத்தக்கது.