வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (16:03 IST)

கோபத்தில் இருக்கும் ரசிகர்களை சமாதானம் செய்த கோஹ்லி

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் கோபமாக இருக்கும் ரசிகர்களை கேப்டன் கோஹ்லி சமாதானப்படுத்தி உள்ளார்.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது டெஸ்ட் போடியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
 
இரண்டாவது போட்டியில் படுமோசமான தோல்வியை சந்தித்து பலரது விமர்சனங்களுக்கு ஆளானது. இதனால் ரசிகர்கள் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ரசிகர்களை சமாதானப்படுத்தும் விதமாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், சில நேரம் வெற்றி பெறுகிறோம். சில நேரம் பாடம் கற்றுக்கொள்கிறோம். எங்கள் மீதான் நம்பிக்கையை நிங்கள் ஒருபோதும் கைவிட்டு விடாதீர்கள். நாங்களும் நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் முயற்சியையும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.