வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 18 அக்டோபர் 2016 (12:41 IST)

சச்சினை விரட்டும் விராட் கோலி, ஆர்வமில்லா ரோகித் சர்மா!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் சச்சின். இவர், சதத்தில் சதம் உட்பட எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார். 

 
இவரின் சாதனைகளை, தற்போதைய இளம் வீரர் விராட் கோலி வேகமாக நெருங்கிவருகிறார்.
 
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்திய வீரர் விராட் கோலி, இந்திய அணி இரண்டாவதாக பேட்டிங் செய்த போது விராட் அடித்த 32வது அரைசதமாகும். ஜாம்பவான் சச்சின், சேசிங் செய்யும் போது 34 அரைசதம் அடித்துள்ளார்.
 
விராட் சேசிங் செய்யும் இன்னும் 3 அரைசதங்கள் அடிக்கும் பட்சத்தில் ஜாம்பவான் சச்சினின் சாதனையை முறியடிக்க கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
 
இதற்கு முன் சச்சினே, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு தனது சாதனையை முறியடிக்கும் தகுதி உள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால், ரோகித் சர்மா இதில் பெறிதும் ஆர்வம் காட்டாமல் உள்ளார்.