1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: சனி, 30 ஆகஸ்ட் 2014 (10:51 IST)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி: 3 ஆவது சுற்றுக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் 3 ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள்  ஆகஸ்ட் 25, 2014 அன்று தொடங்கி செப்டம்பர் 8, 2014 வரை நியூயார்க் நகரில் நடைபெறுகிறது. இதில் செர்பியா வீரர் ஜோகோவிச், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் 3 ஆவது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2 ஆவது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தனது சக நாட்டைச் சேர்ந்த வானியா கிங்கை 6–1, 6–0 என்ற நேர்செட்டில் சாய்த்து 3 ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2 ஆவது சுற்று ஆட்டத்தில் செர்பிய வீரர் ஜோகோவிச், பிரான்ஸ் வீரர் பால் ஹென்ரியை எதிர்க்கொண்டார். இதில் ஜோகோவிச் 6–1, 6–3, 6–0 என்ற நேர்செட்டில் ஹென்ரியை வென்று 3 ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மேலும் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே ஜெர்மனியின் மத்தியாசை 6–3, 6–3, 6–4 என்ற நேர்செட்டில் ஜெய்த்து 3 ஆவது சுற்றுக்குள் நுழைந்தார்.