1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: ஞாயிறு, 3 மே 2015 (09:42 IST)

தேசிய விளையாட்டு போட்டி: தமிழக வீராங்கனை தங்க பதக்கம் வென்று அசத்தல்

மங்களூர் தேசிய விளையாட்டு போட்டியில், தமிழகத்தை சேர்ந்த சூர்யா என்ற வீராங்கனை தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
 
19 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் மங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற 5000 மீ ஓட்டப்பந்தய பெண்கள் பிரிவில் புதுக்கோட்டையை சேர்ந்த சூர்யா என்ற வீராங்கனை தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 2 ஆவது இடத்தை கேரள வீராங்கனை சித்ரா தட்டி சென்றார். மேலும் 3 ஆவது இடத்தை அரியானா வீராங்கனை பரிதி லம்பா வென்றார். 
 
வெற்றி குறித்து சூர்யா கூறுகையில், வெற்றியில் எனது பெற்றோர் கொடுத்த ஊக்கம் முக்கிய பங்கு வகுக்கிறது என்றார். மேலும் எதிர்வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி பதக்கத்தை வெல்வேன் என்றார்.ஆண்கள் பிரிவு 5000 மீ ஓட்டப்பந்தயத்தில், லட்சுமணன் என்ற வீரர் முதலிடத்தை தட்டி சென்றார்.