வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 19 செப்டம்பர் 2020 (17:11 IST)

காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்கும் ரெய்னா!

காஷ்மீரில் கிரிக்கெட் அகாடெமி தொடங்க உள்ளதாக் முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் ரெய்னா இருவரும் ஒரே நாளில் தங்கள் சர்வதேசக் கிரிக்கெட் ஓய்வை அறிவித்தனர். இதையடுத்து சில பிரச்சனைகளால் சி எஸ் கே அணியில் இருந்தும் ரெய்னா வெளியேறியுள்ளார். தற்போது இந்தியாவில் இருக்கும் ரெய்னா காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி ஒன்று தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஏற்கனவே தன் ஓய்வின் போது நாட்டின் பின் தங்கிய பகுதிகளில் இருந்து கிரிக்கெட்டை வளர்க்கும் விதமான முயற்சிகளில் ஈடுபடுவேன் என்று அவர் கூறியிருந்தார்.