வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Bala
Last Modified: சனி, 9 ஏப்ரல் 2016 (11:37 IST)

செய்தியாளர்களை முகம் சுழிக்கவைத்த ரெய்னா

ஐபிஎல் தொடரின் 9வது சீசன் போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில்  மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே அணிகள் மோதுமின்றன.


 


இந்த தொடரில் புதிய அணியான குஜராத் லயன்சுக்கு கேப்டனாக ரெய்னா நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து செய்தியாள்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் வெளிநாட்டவருக்கு முன்னுரிமையா அல்லது இந்தியருக்கு முன்னுரிமையா என கேள்வி எழுப்பினர். என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த ரெய்னா, நீங்கள் உங்கள் மனைவியுடன் இயல்பாக இருப்பீர்களா? அல்லது அடுத்தவர் மனைவியுடன் இயல்பாக இருப்பீர்களா? என்று கேட்டார். இது அங்கிருந்த சில செய்தியாளர்களை முகம் சுழிக்கவைத்தது. ஆனாலும் அந்த கேள்வியால் அரங்கமே சிரிப்பலை எழுந்தது.