வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 8 ஜூன் 2017 (22:53 IST)

அஸ்வின் அருமை இப்ப தெரியுதா? 321 அடிச்சும் ஜெயிக்க முடியலையே!

இன்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 321 ரன்கள் அடித்திருந்த போதிலும் 48.4 ஓவர்களில் சேஸ் செய்து இலங்கை அணி வெற்றி பெற்றது.



 


டாஸ் வென்ற இலங்கை அணி இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டு கொண்டது. முதலில் களமிறங்கிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் 78, ஷிகர் தவானின் 125, தோனியின் அதிரடி 63 ஆகியவற்றோடு 321 ரன்கள் குவித்தது.

இந்த இலக்கை இலங்கையால் எட்டுவது கடினன் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி பவுலர்களின் பந்துவிச்சை அடித்து நொறுக்கி 48.4 ஓவர்களில் இலங்கை அணி 322 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க தவறியதே இந்த தோல்விக்கு காரணம் என்றும், அஸ்வின் இல்லாத அருமை இப்பொழுதுதான் தெரிகிறது என்றும் நெட்டிஸன்கள் டுவிட்டரில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.