1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 25 செப்டம்பர் 2014 (15:52 IST)

ஆசிய போட்டி: வெள்ளி பதக்கம் வென்ற சவுரவ் கோசலுக்கு பரிசுத் தொகை-ஜெயலலிதா அறிவிப்பு

ஆசிய போட்டிகளில் ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் பங்கு பெற்ற சவுரவ் கோசலுக்கு 30 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
17 ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் தென்கொரியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஸ்குவாஷ் போட்டியில் கலந்து கொண்ட சவுரவ் கோசல் வெள்ளி பதக்கம் வென்று சாதனை புரிந்தார்.
 
இதுகுறித்து முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, ஸ்குவாஷ் போட்டியில் நீங்கள் வெற்றி பெற்றதை அறிந்து மிகவும் சந்தோஷம் அடைந்தேன். இந்த சாதனைக்காக தமிழக மக்கள் சார்பில் எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வெல்லும் வீரருக்கான பரிசுத் தொகையை 30 லட்சமாக உயர்த்தி கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பரில் அறிவித்திருந்தேன்.
 
தமிழக அரசிடம் இருந்து இத்தொகையை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். உங்களுக்குக்கும், நீங்கள் பெற்ற வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்துக்கும் தமிழகத்திற்கும் எதிர்காலத்தில் மேலும் பல புகழை நீங்கள் சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன், என கூறப்பட்டுள்ளது.