வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 27 அக்டோபர் 2014 (12:25 IST)

டென்னிஸ் போட்டி: இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது

உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா–ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
டென்னிஸ் சாம்பியன்ஷிப் இரட்டையர் பிரிவில் டாப்–8 ஜோடிகள் பங்கேற்றன. இதில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சானியா மிர்சா–காராபிளாக் ஜோடி, சூய் பெங்–சு வெய் ஹூசை ஜோடியை நேருக்கு நேர் சந்தித்தது.
 
இதில் சானியா–காரா பிளாக் ஜோடி 6–1, 6–0 என்ற நேர் செட் கணக்கில் பெங்–சு வெய் ஜோடியை வீழ்த்தியது. சானியா மிர்சா வென்ற 22 ஆவது சர்வதேச இரட்டையர் பட்டம் இதுவாகும். 
 
இதுகுறித்து சானியா மிர்சா கூறுகையில், போட்டியில் முழு போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அதைத் தான் நாங்கள் நிரூபித்து கோப்பையை வென்றிருக்கிறோம். மேலும் இது ஒரு அற்புதமான பயணம் ஆகும். காரா பிளாக் ஒரு சிறந்த சாம்பியன். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன் என்றார்.
 
மேலும் இதுகுறித்து காரா பிளாக் கூறுகையில், சானியாவுடன் பயணத்தை வெற்றியுடன் தொடங்கி, இப்போது வெற்றியுடன் நிறைவு செய்திருக்கிறேன். இந்த ஆண்டு எங்களுக்கு வியப்புக்குரிய ஆண்டாக அமைந்திருக்கிறது என்றார்.