1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 7 மே 2018 (22:06 IST)

146 ரன்களில் சுருண்டது ஐதராபாத்: பெங்களூருக்கு வெற்றி கிடைக்குமா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 39வது ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராத் கோஹ்லி, முதலில் பந்துவீச முடிவு செய்தார். 
 
இதனால் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் 56 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 35 ரன்களும் எடுத்தனர். பெங்களூரு அணியை பொருத்தவரையில் செளதி மற்றும் முகம்மது சிராஜ் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
 
இந்த நிலையில் 147 என்ற இலக்கை நோக்கி பெங்களூர் அணி விளையாடி வருகிறது. இன்றைய போட்டி பெங்களூரு அணிக்கு மிக முக்கிய போட்டி ஆகும். இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் 8 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு செல்ல ஒரு வாய்ப்பு பெங்களூரு அணிக்கு கிடைக்கும்