1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 25 மே 2020 (22:43 IST)

ரோஹித் சர்மாவை கேப்டனாக்க வேண்டும் - முன்னாள் வீரர் கருத்து

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அதுல் வாசன் இந்திய அணியின் கேப்டன் சிப் பற்றி இரண்டு கருத்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்கள் நியமிப்பது குறித்து அனைவரும் யோசிக்க வேண்டும். அதனால் இந்திய அணியின் கேப்டன் கோலியின் பணிச்சுமை குறையும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கு விராட் கோலியும் டி20 தொடருக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.