வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 17 ஜூலை 2018 (18:58 IST)

2 ரன்களில் வெளியேறிய ரோகித்; 25 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழந்து தவிக்கும் இந்தியா

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 25 ஓவர்களுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறி வருகிறது.

 
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது.
 
தொடக்க வீரரான ரோகித் சர்மா 2 ரன்களில் வெளியேறினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட் கோஹ்லி அரைசதத்துடன் களத்தில் உள்ளார். தவான் 44 ரன்களில் வெளியேறினார். தினேஷ் கார்த்திக் 21 ரன்களில் வெளியேறினார். 25 ஓவர் முடிவில் இந்திய அணி 128 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து திணறி வருகிறது.
 
தற்போது தோனி கேப்டன் கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடினால் மட்டுமே இந்திய அணி சேஸிங்க்கு தேவையான ஸ்கோர் கிடைக்கும்.