வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2017 (04:24 IST)

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே! ஆஸ்திரேலியா புலம்பல்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆனால் ஆஸ்திரேலியாவின் அபாரமன பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 182 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால் மட்டும் அபாரமாக விளையாடி 95 ரன்கள் குவித்தார்



 


இந்த நிலையில் 183 எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் ஒருகட்டத்தில் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

34 ஓவர்களில் இன்னும் 100 மட்டுமே எடுத்தால் வெற்றி கிடைக்கவுள்ள நிலையில் மழை பெய்ததால் கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் வெற்றியை மழை பறித்து கொண்டது பரிதாபகரமானதுதான்.