வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 12 ஏப்ரல் 2018 (16:06 IST)

காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் மீண்டும் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ராகுல் அவாரே தங்க பதக்கம் வென்றார்.

 
 
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியின் 9-வது நாளான இன்று இந்தியாவுக்கு மல்யுத்த போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கம் கிடைத்துள்ளது. ஏற்கனவே இன்றைய போட்டியில் சுஷில் குமார் தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.
 
இந்த நிலையில் ஆடவர் 57 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ராகுல் அவாரே  தங்கப்பதக்கம் வென்றார்.