வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 23 ஏப்ரல் 2018 (21:57 IST)

கெயில் இல்லாமல் திணறிய பஞ்சாப்; டெல்லிக்கு 144 ரன்கள் இலக்கு

முதல் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் குவித்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் - டெல்லி அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது.
 
இன்றைய போட்டியில் கெயில் களமிறங்கவில்லை. தொடக்க வீரர் ராகுல் வெளியேறிய பின் பஞ்சாப் அணி திணறியது. கருண் நாயர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் குவித்தது,
 
இதையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியுள்ளது.