1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 அக்டோபர் 2018 (22:41 IST)

புரோ கபடி 2018: 3வது ஷெட்யூலுக்கு பின்னர் அணிகளின் நிலவரம்

இந்த ஆண்டுக்கான புரோ கபடி போட்டியின் முதல் ஷெட்யூல் சென்னையில் கடந்த 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற்றது,. அதன்பின்னர் இரண்டாவது ஷெட்யூலாக 12ஆம் தேதி முதல் ஹரியானாவிலும், மூன்றாவது ஷெட்யூலாக புனேவில் 18ஆம் தேதி முதல் நடைபெற்றது

இந்த நிலையில் நாளை முதல் அடுத்த ஷெட்யூல் பாட்னாவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இதுவரை விளையாடியுள்ள அணிகளின் புள்ளிப்பட்டியலை தற்போது பார்ப்போம்

ஏ பிரிவில் புனே அணி 32 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 24 புள்ளிகளுடன் மும்பை அணி இரண்டாவது இடத்திலும், 14 புள்ளிகளுடன் டெல்லி அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

அதேபோல் பி பிரிவில் பெங்களூரு அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணி மற்றும் உபி அணிகள் தலா 16 புள்ளிகள் எடுத்து புள்ளிகள் அளவில் சமநிலையில் இருந்தாலும், பெங்களூரு அணி முதலிடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது