1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 6 ஜூலை 2017 (18:40 IST)

மெஸ்ஸிக்கு திருமண பரிசாக கிடைத்த ரூ.2,200 கோடி

உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு திருமண பரிசாக ரூ.2,200 கோடி ஜாக்பாட் அடித்துள்ளது.


 

 
உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர்களின் ஒருவரான மெஸ்ஸிக்கு ஜூலை மாதம் 1ஆம் தேதி திருமணம் நடைப்பெற்றது. திருமணம் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. தற்போது இவர் விளையாடி கொண்டிருக்கும் பார்சிலோனா கால்பந்து கிளப் அணிக்கான ஒப்பந்தம் அடுத்த 5 ஆண்டுகள் வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர் பார்சிலோனாவுக்காக 2021 வரை  விளையாட உள்ளார்.
 
அணி நிர்வாகம் இவருக்கு 300 மில்லியன் யூரோ வழங்க சம்மதித்துள்ளது. இந்தியா மதிப்பின் படி ரூ.2,200 கோடி ஆகும். இது இவருக்கு கிடைத்த திருமண பரிசாக கருதப்படுகிறது. மேலும் இது இவருக்கு அடித்த ஜாக்பாட் என்றும் கூறப்படுகிறது. உண்மையில் இது இவரது திறமைக்கு கிடைத்த பரிசாகும்.