வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 22 செப்டம்பர் 2014 (13:12 IST)

மாஸ்டர்ஸ் செஸ் தொடர்: விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார்

மாஸ்டர்ஸ் செஸ் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடந்துவந்த நிலையில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
 
6 ஆவது பில்பாவ் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றது. இதில் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் உள்பட 4 வீரர்கள் பங்கு பெற்றனர். இந்நிலையில், கடைசி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் - லெவோன் அரோனியன் ஆகியோர் நேருக்கு நேர் மோதினர்.
 
இதில் 6 சுற்றுகள் முடிவில் விஸ்வநாதன் ஆனந்த் 11 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து பட்டத்தை கைப்பற்றினார். அரோனியன் 10 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். மற்ற இரு வீரர்கள் ரஸ்லன் போனமரிவ், வலேஜோ பொன்ஸ் தலா 5 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளனர்.