செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 26 மே 2017 (15:20 IST)

நிருபரின் அந்த கேள்வி: ஆங்ரி பேர்ட் ஆன கோலி!!

செய்தியாளர்களின் சந்திப்பின் போது நிருபர் கேட்ட ஒரு கேள்வியால் இந்திய கேப்டன் விராட் கோலி கடும் கோபமடைந்தார்.


 
 
இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க  சென்றுள்ளது. அப்போது நடந்த செய்தியாளர்களின் சந்திப்பில்  நிருபர்கள் கேள்விக்கு பொறுமையாக பதில் சொல்லியபடி இருந்தார் கோலி. 
 
ஆனால், அப்போது நிருபர் கேட்ட ஒரு கேள்வி அவரை சீண்டிவிட்டது. நிருபர் கேட்ட கேள்வியும், அதற்கு கோலி அளித்த பதிலும் பின்வருமாரு..
 
கேள்வி: இப்போதுள்ள சூழ்நிலையை மனதில் வைத்துக்கொண்டு, பாகிஸ்தானுடன் ஆடுவது சரியான சாய்சாக இருக்குமா? (ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடாத நிலையை குறிப்பிட்டு) 
 
பதில்: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் இதில் கூறுவதற்கு ஒன்றுமில்லை ஏனெனில் நீங்கள் ஏற்கனவே ஒரு கருத்துக்கு வந்துவிட்டீர்கள் என கோபமாக பதிலளித்தார்.