வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 17 ஜூன் 2019 (08:47 IST)

பேட்டில் படாத பந்து… தானாக வெளியேறிய கோலி – ஓய்வறையில் அதிருப்தி !

நேற்றையப் போட்டியில் இந்தியாவின் பேட்டிங்கின் போது கோஹ்லியின் அவுட்டில் சர்ச்சைகள் உருவாகியுள்ளது.

நேற்றையப் போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற சாதனையைத் தக்க வைத்துள்ளது.

இந்த போட்டியின் 48 ஆவது ஓவரில் முகமது அமீர் வீசிய பவுன்சரை கோலி அடிக்க முயன்றார். ஆனால் அது கீப்பர் கைவசம் தஞ்சம் புகுந்தது. உடனே பாகிஸ்தான் அவுட்டுக்கு முறையிட நடுவரின் முடிவுக்கு முன்னரே கோஹ்லி வெளியேறினார்.

ஆனால் ஸ்னிக்கோ மீட்டரில் பந்து பேட்டில் படவில்லை என்றும் பேட் ஹெல்மெட்டில் பட்டதால் வந்த சத்தமாக இருக்கும் என தெளிவாகக் காட்டியது. இதனை ஓய்வறையில் இருந்த பார்த்த கோஹ்லி அதிருப்தியடைந்தார். கோஹ்லி அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த போது அவுட் ஆனதால் அணியின் ஸ்கோர் குறைந்தது மட்டுமில்லாமல் 50 ஓவர்கள் அவர் நின்றிருந்தால் ஒருவேளை சதமடிக்கக் கூட அவர் முயன்றிருக்கலாம்.