வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 29 ஜூன் 2018 (15:49 IST)

கபடி மாஸ்டர்ஸ் தொடர்: இந்தியா- தென்கொரியா இன்று மோதல்

துபாயில் நடைபெறும் மாஸ்டர் கபடி லீக் தொடரில் இன்று நடக்கும் அரை இறுதி சுற்றில் இந்தியா- தென்கொரியா அணிகள் மோதுகின்றன.
மாஸ்டர்ஸ் கபடி தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், கென்யா உள்ளிட்ட 3 அணிகள் ஏ பிரிவிலும், இரான், தென்கொரியா, அர்ஜென்டீனா உள்ளிட்ட 3 அணிகள் பி பிரிவிலும் விளையாடுகின்றன.
 
இந்த இரு பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், இரான், தென்கொரியா உள்ளிட்ட அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.
 
இந்நிலையில்,  இன்று அரை இறுதி சுற்றிக்கான ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் இரவு 8 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - இரான் அணியும், இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- தென்கொரியா அணிகள் மோதுகின்றன.